சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகள் அட்டகாசம் - வாகனங்களுக்கு தீ வைப்பு

சத்தீஸ்கர் மாநிலம் தாண்டிவாடா பகுதியில், நக்சலைட்டுகளால் வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.
சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகள் அட்டகாசம் - வாகனங்களுக்கு தீ வைப்பு
x
சத்தீஸ்கர் மாநிலம் தாண்டிவாடா பகுதியில், நக்சலைட்டுகளால், வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. துர்லி, காமவாடா ஆகிய பகுதிகளில், பயணிகள் பேருந்தை வழிமறித்த நக்சலைட்டுகள், அவர்களை துப்பாக்கி முனையில் கீழே இறங்குமாறு மிரட்டினர். அச்சத்தில் பயணிகள்  அனைவரும் கீழே இறங்கியதை அடுத்து, 2 பேருந்துக்கும், ஒரு டிரக்குக்கும் நக்சலைட்டுகள் தீ வைத்தனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு சுக்மா மாவட்டத்தில் நடந்த என்கவுன்டரில் 15 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக, இந்தத் தாக்குதலை  நடந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்