இந்திரா பானர்ஜி உச்சநீதிமன்ற நீதிபதியாகிறார்

உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, கே.எம்.ஜோசப் மற்றும் வினித் சரண் ஆகியோரை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக்க மத்திய சட்ட அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்திரா பானர்ஜி உச்சநீதிமன்ற நீதிபதியாகிறார்
x
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, உத்தரகாண்ட் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.எம்.ஜோசப் மற்றும் ஒடிசா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வினித் சரண் ஆகியோரை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க தலைமை நீதிபதி தலைமையிலான கொலிஜியம் பரிந்துரைந்து இருந்தது. இந்த பரிந்துரையை ஆய்வு செய்த மத்திய சட்ட அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் 3 பேருக்கு நியமன உத்தரவை குடியரசுத் தலைவர் பிறப்பிப்பார் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. உத்தரகாண்ட் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.எம்.ஜோசப் பரிந்துரையை மீண்டும் பரிசீலிக்க மத்திய அரசு ஏற்கனவே கொலிஜியத்தை வலியுறுத்திய நிலையில், தற்போது ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்