சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் பணம் 34% குறைந்தது - நிதி அமைச்சர் பியூஷ் கோயல்

50 சதவீதம் அதிகரித்துள்ளதாக கூறுவது தவறான தகவல்
சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் பணம் 34% குறைந்தது - நிதி அமைச்சர் பியூஷ் கோயல்
x
* சுவிஸ் வங்கிகளில் உள்ள இந்தியர்களின் பணம் கடந்த ஆண்டை காட்டிலும் 34 சதவீதம் வரை குறைந்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

* நாடாளுமன்ற மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அவர், சர்வதேச முதலீடுகளின் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த தகவல் தெரிய வந்துள்ளதாக குறிப்பிட்டார். 

* உண்மை இவ்வாறு இருக்க, சுவிஸ் வங்களில் இந்தியர்களின் பணம் 50 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக தவறான தகவல் பரப்பப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்