பள்ளிக்கு அனுப்பாத பெற்றோர் மீது, சிறுவன் காவல்நிலையத்தில் புகார்

உத்தரபிரதேச மாநிலம் எடாவாவில், பள்ளிக்கு அனுப்பாத பெற்றோர் மீது, சிறுவன் காவல்நிலையத்தில் புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளிக்கு அனுப்பாத பெற்றோர் மீது, சிறுவன் காவல்நிலையத்தில் புகார்
x
கவுரவ் என்ற சிறுவன், எடாவா காவல்நிலையத்திற்கு நேரடியாக சென்று, பெற்றோர் தம்மை பள்ளியில் படிக்க அனுமதிக்கவில்லை என்று புகார் தெரிவித்தார். புகாரை ஏற்றுக்கொண்ட காவல் ஆய்வாளர், சிறுவனின் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினார். அப்போது சிறுவனை பெற்றோர், தினக்கூலி வேலை செய்ய கட்டாயப்படுத்தியது தெரிய வந்தது. இதனையடுத்து, சிறுவனின் விருப்பப்படி, தனியார் பள்ளியில் அட்மிஷன் பெற்று, சேர்த்து விட்டார். கல்வி பயில வேண்டும் என்ற நோக்கில், சிறுவன் பெற்றோர் மீது புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்