"காவல்துறை ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்" - அமைச்சரிடம் கண்ணீர் மல்க புகார்

சரவணனுக்கு 5 ஆயிரம் ரூபாய் வழங்கிய அமைச்சர், புகார் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
காவல்துறை ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் - அமைச்சரிடம் கண்ணீர் மல்க புகார்
x
சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த சரவணன், அடிதடி சம்பவங்களில் ஈடுபட்டு சிறை சென்று வந்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் பழைய வண்ணாரப்பேட்டை காவல் ஆய்வாளர் ஜவகர், விசாரணைக்காக அழைத்து சென்று அவரது ஒரு காலை உடைத்துவிட்டதால் நடக்க முடியாத நிலையில் இருப்பதாக சரவணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமாரை அவரது இல்லத்தில் சந்தித்து கண்ணீர் மல்க புகார் அளித்தார். அப்போது, சரவணனுக்கு 5 ஆயிரம் ரூபாய் வழங்கிய அமைச்சர், புகார் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்