லோக் ஆயுக்தா சட்ட மசோதா: சட்டப்பேரவையில் விரைவில் தாக்கல்?

தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைப்பைக் கொண்டு வருவதற்கான சட்ட மசோதா, தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு 9-ந் தேதி நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லோக் ஆயுக்தா சட்ட மசோதா: சட்டப்பேரவையில் விரைவில் தாக்கல்?
x
தமிழகத்தில் லோக் ஆயுக்தாவை அமைப்பதற்கான நடவடிக்கை குறித்து ஜூலை 10-ந் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து  லோக் ஆயுக்தாவை அமைப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.  தற்போது தமிழக சட்டசபைக் கூட்டத்தொடர் நடைபெற்று வருவதால், நாளை சட்ட மசோதா சட்டசபையில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மசோதா சட்டசபை கூட்டத் தொடரின் இறுதி நாளான 9-ந் தேதியன்று விவாதத்தின் மூலம் நிறைவேற்றப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்