சென்னை விமான நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த பை - மத்திய தொழிற்படை போலீசார் சோதனை

மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களுடன் மத்திய தொழிற்படை போலீசார் விரைந்து வந்து சோதனை செய்தனர்.
சென்னை விமான நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த பை - மத்திய தொழிற்படை போலீசார்  சோதனை
x
சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு முனையம் பகுதியில், வருகை பகுதி அருகே பை ஒன்று கிடந்தது. 3வது நுழைவு வாயிலின் முன்பு கேட்பாரற்று கிடந்த அந்த பையை பார்த்தது, வெடி பொருள் இருக்குமோ என்ற பீதி ஏற்பட்டது. உடனே, மோப்ப நாய் மற்றும்  வெடிகுண்டு நிபுணர்களுடன் மத்திய தொழிற்படை போலீசார் விரைந்து வந்து சோதனை செய்தனர். அப்போது, வெறும் டிபன் பாக்​ஸ்​ மட்டும் அதில் இருந்ததால் நிம்மதி அடைந்தனர். இதனால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்