ஜூலை 20 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்

லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு
ஜூலை 20 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்
x
மத்திய அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை அடுத்து, வரும் ஜூலை 20-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக லாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.

 சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தென்மண்டல மோட்டார் போக்குவரத்து நலச்சங்கத்தின் பொதுசெயலாளர் சண்முகப்பா, நாடு முழுவதும் சுங்கக் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும், உயர்த்தப்பட்ட காப்பீட்டு பிரிமீயத் தொகையை குறைக்க வேண்டும், லாரிகளுக்கான வருமான வரியை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.  

Next Story

மேலும் செய்திகள்