சித்த மருத்துவ மாணவருக்கு கல்விக்கடன் மறுத்த வங்கிக்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம்

சித்த மருத்துவ மாணவருக்கு கல்வி கடன் வழங்க மறுத்த வங்கிக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
சித்த மருத்துவ மாணவருக்கு கல்விக்கடன் மறுத்த வங்கிக்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம்
x
சித்த மருத்துவ மாணவருக்கு கல்விக்கடன் மறுத்த வங்கிக்கு கண்டனம்



சென்னையில் உள்ள தனியார் சித்த மருத்துவ கல்லூரியில் மாணவர் சேர்க்கை பெற்ற திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை சேர்ந்த நவின் என்ற மாணவர் கல்வி கடன் வழங்க கோரி இந்தியன் வங்கியின் ஆரணி கிளையில் விண்ணப்பித்துள்ளார். ஆனால் அந்த கல்லூரியில் படித்து வெளியேறிய மாணவர்கள் வேலைவாய்ப்பு தொடர்பான ஆவணங்களை கல்லூரி நிர்வாகம் பராமரிக்கவில்லை என கூறி கல்வி கடன் வழங்க வங்கி மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

இதை எதிர்த்து நவின் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன், நன்றாக படிக்க கூடிய மாணவருக்கு கல்வி கடன் வழங்க மறுத்த வங்கி நிர்வாகத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.மாணவரின் எதிர்காலத்தை கேள்விகுறியாக்கிய வங்கி நிர்வாகத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்திருக்க வேண்டும் என்று கூறிய நீதிபதி, ஆனால் எதிர்காலத்தில் விதிமுறைகள் கண்டிப்பாக கடைபிடிக்கப்படும் என வங்கி நிர்வாகம் உத்தரவாதம் அளித்ததால் அபராதம் விதிக்கப்படவில்லை என்று  கூறி, மாணவரின் மனுவை பரிசீலிக்க வங்கிக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
 



Next Story

மேலும் செய்திகள்