20 ஆண்டுகளாக கால்புண்ணுடன் அவதிபட்ட மன நோயாளி - மருத்துவமனையில் சேர்த்த முக நூல் நண்பர்கள், 1 மாத சம்பளத்தை சிகிச்சைக்காக வழங்கிய காவலர்

20 ஆண்டுகளாக காலில் புண்ணுடன் அவதிபட்டு வந்த மன நோயாளியை முக நூல் நண்பர்கள் ஒன்று சேர்ந்து மருத்துவமனையில் சேர்த்தது சிகிச்சை அளித்தனர்.
20 ஆண்டுகளாக கால்புண்ணுடன் அவதிபட்ட மன நோயாளி - மருத்துவமனையில் சேர்த்த முக நூல் நண்பர்கள், 1 மாத சம்பளத்தை சிகிச்சைக்காக வழங்கிய காவலர்
x
கால்புண்ணுடன் அவதிபட்ட மன நோயாளி - மருத்துவமனையில் சேர்த்த முக நூல் நண்பர்கள்



நெல்லை மாவட்டம் திசையன்விளையை அடுத்த செல்வ மருதூரை சேர்ந்தவர் முருகன்... இவர் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் மன நலம் பாதிக்கப்பட்டதை அடுத்து அவரது மனைவி அவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். 20 ஆண்டுகளுக்கு முன்  காலில் ஏற்பட்ட காயம், புண்ணாக மாறியது. முருகனை  காப்பாற்ற வேண்டும் என  , திசையன்விளை பகுதி முகநூல் நண்பர்கள் சமூக வலைதளங்களில் வேண்டுகோள் விடுத்திருந்தனர். இதனையடுத்து முகநூல் நண்பர்கள் ஒன்றுசேர்ந்து அவரது தலை முடியை நீக்கி, குளிப்பாட்டி, புத்தாடைகள் அணிவித்து, கார் மூலம் மருத்துவமனை கொண்டு சென்றனர். முதலில் கால் புண்ணை சரி செய்வது பின்னர் மனநோய்க்கு சிகிச்சை அளிப்பது என அவர்கள் முடிவெடுத்துள்ளனர்...

Next Story

மேலும் செய்திகள்