விஷம் குடித்து கிணற்றில் விழுந்த மூதாட்டி - உயிர் பிழைத்த அதிசயம்

திருப்பூர் அருகே தற்கொலை செய்து கொள்வதற்காக விஷம் குடித்துவிட்டு கிணற்றில் விழுந்த மூதாட்டி உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
விஷம் குடித்து கிணற்றில் விழுந்த மூதாட்டி - உயிர் பிழைத்த அதிசயம்
x
திருப்பூர் மாவட்டம், வெங்கிட்டாப்புரம் பகுதியில்,  மூதாட்டி ஒருவர் கிணற்றில்  குதித்து தற்கொலைக்கு முயன்றதாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு விரைந்த வீரர்கள், 60 அடி ஆழ கிணற்றில், தண்ணீரில் உயிருக்கு போராடிய மூதாட்டியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், சேடபாளையத்தை சேர்ந்த பழனியம்மாள் என்ற அந்த மூதாட்டி, குடும்ப பிரச்சினை காரணமாக விஷம் குடித்து கிணற்றில் விழுந்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது.

Next Story

மேலும் செய்திகள்