ஏ.டி.எம்-ல் நூதன கொள்ளை - 6 பேர் கும்பல் கைது

போலி ஏ.டி.எம் கார்டு தயாரித்து கோடிக்கணக்கில் கொள்ளையடித்த கும்பலை, போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர்
ஏ.டி.எம்-ல் நூதன கொள்ளை - 6 பேர் கும்பல் கைது
x
கோவையில் ஸ்கிம்மர் கருவி பொருத்தி, வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் இருந்து கோடிக்கணக்கில் பணம் கொள்ளையடித்த கும்பலை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பாக சென்னையை சேர்ந்த வாசிம், நிரஞ்சன், இலங்கையை சேர்ந்த நவசாந்தன், கிருஷ்ணகிரி தமிழரசன், திருச்சி கிஷோர், திருப்பூர் மனோகரன் ஆகிய 6 பேரும் கடந்த சனிக்கிழமை கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களில் நவசாந்தன், நிரஞ்சன், தமிழசரன் ஆகிய 3 பேரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். புதுச்சேரியில் பிடிபட்ட கும்பலுடன், இவர்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்