சேலம் - சென்னை எட்டு வழிசாலை நில அளவீடு பணி நிறைவு

சேலம் - சென்னை எட்டு வழிசாலை நில அளவீடு பணி நிறைவு : வருகிற 13 ந்தேதி கருத்து கேட்பு கூட்டம்
சேலம் - சென்னை எட்டு வழிசாலை நில அளவீடு பணி நிறைவு
x
சேலம் மாவட்டத்தில் அமைய உள்ள எட்டு வழி சாலை திட்டத்திற்காக,  நிலத்தை அளவீடு செய்யும் பணி 7 வது நாளான இன்று காலை துவங்கியது. தனி தாசில்தார் பத்மபிரியா, தலைமையில் இன்று பாரப்பட்டி, பூலாவரி, சித்தனேரி, உத்தமசோழபுரம் வரை தூரத்தை அரசு அதிகாரிகள், அளவீடு செய்து முட்டுக்கல் நடும் பணி துவங்கி பின்னர் நிறைவடைந்தது. இதுவரை சேலத்தில், 36 கிலோ மீட்டர் தூரம் வரை, நிலம் அளவீடு செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அடுத்த மாதம் 13 ஆம் தேதி கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற்று முடிந்த உடன், தனிநபரின் நிலங்கள் கையகப்படுத்துவது மற்றும் மதிப்பிடும் பணி ஆகியவை நடைபெறும் என, அதிகாரிகள் கூறினர்.

Next Story

மேலும் செய்திகள்