பூட்டியிருந்த ஆசிரியர் வீட்டில் கொள்ளை சாமர்த்தியமாக திருடிய கொள்ளையர்கள்

திருச்சி மணப்பாறை காந்திநகரை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியரான ராமசாமி வீட்டின் பூட்டை உடைத்து வெள்ளி பொருட்களை கொள்ளையர்கள் திருடி சென்றுள்ளனர்.
பூட்டியிருந்த ஆசிரியர் வீட்டில் கொள்ளை சாமர்த்தியமாக திருடிய கொள்ளையர்கள்
x
திருச்சி  மணப்பாறை காந்திநகரை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியரான ராமசாமி வீட்டின் பூட்டை உடைத்து வெள்ளி பொருட்களை கொள்ளையர்கள் திருடி சென்றுள்ளனர். ராமசாமி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஒசூரில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்று விட்டார். இந்நிலையில் இன்று காலை விட்டிற்கு முன்பு காரை நிறுத்தி விட்டு, வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. அதிக அளவில் குடியிருப்புகள் நிறைந்த இந்த பகுதியில் அரங்கேறியுள்ள இந்த கொள்ளை சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளைக் கொண்டு கொள்ளையர்கள் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்