மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவ ஆராய்ச்சி மையமாக உருவாகும் - அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி
மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடத்தை அமைச்சர்கள் இன்று ஆய்வு செய்தனர்.
எய்ம்ஸ் மருத்துவமனை அமையுள்ள இடத்தை சுகாதார துரை அமைச்சர் விஜயபாஸ்கர், கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு, வருவாய் துறை அமைச்சர் உதயகுமார் மற்றும் சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். அப்போது மருத்துவமனை கட்டிடங்கள் குறித்த வரைபடங்களை பார்வையிட்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், மருத்துவமனைக்கு தேவையான நிலம், குடிநீர், மின்சாரம், 4-வழிச்சாலை உள்ளிட்ட அனைத்து கட்டமைப்பும் செய்யப்பட்டு முழுவீச்சில் பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அமைச்சர் உதயகுமார், எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பான விரிவான அறிக்கை நாளை மத்திய அரசிடம் தாக்கல் செய்யப்படும் என கூறினார்.
Next Story