நெல்லையப்பர் கோவில் ஆனித்திருவிழா கொடியேற்றம், வரும் 27ந் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது

நெல்லையப்பர் கோவில் ஆனித்திருவிழா கொடி ஏற்றம் இன்று நடைபெற்றது. முக்கிய நிகழ்வான தேரோட்டம் 27ந் தேதி நடைபெற உள்ளது.
நெல்லையப்பர் கோவில் ஆனித்திருவிழா கொடியேற்றம், வரும் 27ந் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது
x
தமிழகத்தின் மிகப்பெரிய சிவாலயங்களில் ஒன்று  நெல்லையில் உள்ள நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் ஆலயம்.   நெல்லுக்கு வேலியிட்ட நெல்லையப்பர் என்று அழைக்கப்படும் இந்த கோயிலில்  நடைபெறும் தேரோட்டம் உலக பிரசித்தி பெற்றது. இந்த ஆண்டிற்கான ஆனி திருவிழா கொடியேற்றம் இன்று காலை 6.23 மணிக்கு நடைபெற்றது. பத்து நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் சுவாமி அம்பாள் வீதியுலா நடைபெறும். முக்கிய நிகழ்வான தேரோட்டம் வரும் 27 ம் தேதி நடைபெற உள்ளது. லட்சக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்பர் என்பதால் இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்