"வனிதா விஜயகுமார் பீட்டர் பால் 23ஆம் தேதி ஆஜராக வேண்டும்" - பீட்டர் பாலின் மனைவி தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் உத்தரவு
நடிகை வனிதா விஜயகுமார் மற்றும் பீட்டர் பால் ஆகியோர் வரும் 23ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஜூன் மாதம், பீட்டர்பால் என்பவரை நடிகை வனிதா விஜயகுமார், திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், பீட்டர்பாலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன், தன்னுடனான திருமணம் ரத்து செய்யப்படாத நிலையில் வனிதா விஜயகுமாரை திருமணம் செய்து கொண்டது குற்றம் எனக் கூறியதோடு புகார் அளித்தும் நடவடிக்கை இல்லாததால் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த சைதாப்பேட்டை நீதிமன்றம், புகார்தாரரான ஹெலனுக்கும், பீட்டர் பாலுக்கும் திருமணம் நடந்திருக்கிறது என்பதற்கும், அந்த திருமணம் ரத்தாகவில்லை என்பதற்கு ஆதாரங்களும், முகாந்திரமும் இருப்பதாக கூறி, வழக்கு தொடர்பாக வரும் 23ஆம் தேதி ஆஜராகும்படி, வனிதா விஜயகுமாருக்கும், பீட்டர்பாலுக்கும் உத்தரவிட்டுள்ளது.
Next Story