நடிகர் சூரி கொடுத்த பணமோசடி புகார் - உயர் நீதிமன்றத்தில் அடுத்த வாரம் விசாரணை

நடிகர் சூரி அளித்த பண மோசடி புகாரின் அடிப்படையில், முன்னாள் டிஜிபி ரமேஷ் குடவாலா முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
நடிகர் சூரி கொடுத்த பணமோசடி புகார் - உயர் நீதிமன்றத்தில் அடுத்த வாரம் விசாரணை
x
நடிகர் விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடித்துள்ள 'வீரதீர சூரன்' என்ற திரைப்படத்தில் நடிகர் சூரி நடித்தார். இதற்காக வழங்க வேண்டிய 40 லட்சம் ரூபாய் ஊதியத்துக்கு பதில் சிறுசேரியில் ஒரு நிலத்தை வாங்கித் தருவதாக, அப்படத்தின் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் மற்றும் விஷ்ணு விஷால் தந்தையும், முன்னாள் டி.ஜி.பி.யுமான ரமேஷ் குடவாலா கூறியுள்ளனர். அந்த நிலத்துக்காக இவர்கள் இருவரும், 2 கோடியே 70 லட்சம் ரூபாயை கூடுதலாக பெற்று மோசடி செய்து விட்டதாக போலீசில் நடிகர் சூரி புகார் செய்தார்.இந்த புகாரின் அடிப்படையில் பதிவான வழக்கை தற்போது மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர். 
இந்தநிலையில், போலீசார் தன்னை கைது செய்யக்கூடும் என்ற அச்சத்தில் முன்னாள் டி.ஜி.பி. ரமேஷ் குடவாலா முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு அடுத்த வாரம் விசாரணைக்கு வர உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்