கணவரை பிரிந்த வனிதா காரணம் என்ன? - "தோற்றுவிட்டேன்" என அவரே வெளியிட்ட வீடியோ

பெரும் பரபரப்பை கிளப்பிய நடிகை வனிதா விஜயகுமாரின் திருமண வாழ்வு தற்போது முடிவுக்கு வந்திருக்கிறது.
கணவரை பிரிந்த வனிதா காரணம் என்ன? - தோற்றுவிட்டேன் என அவரே வெளியிட்ட வீடியோ
x
மீண்டும் கிளம்பிவிட்டது நடிகை வனிதாவின் திருமண சர்ச்சை.
சென்னை, போரூரில் வசித்து வரும் வனிதா விஜயகுமாருக்கு நடிகை, டி.வி பிரபலம், யூ டியூப் சமையல் நிபுணர் என பல முகங்கள் உள்ளன. 
ஆனால் இவர் பேரைச் சொன்னது பலருக்கும் பளிச்சென மனதில் எழுவது சமீபத்தில் இவர் செய்த திருமணம்தான்.ஏற்கனவே இரண்டு முறை திருமண வாழ்க்கை தோல்வியில் முடிந்த நிலையில் கடந்த ஜூன் 27-ஆம் தேதி பீட்டா் பால் என்பவரை திருமணம் செய்து கொண்டார் வனிதா விஜயகுமார். பீட்டர் பாலுக்கு ஏற்கெனெவே எலிசபெத் ஹெலன் என்பவருடன் திருமணமாகிவிட்டது. விவாகரத்து பெறாமலே வனிதாவை அவர் திருமணம் செய்து விட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. வனிதா விஜயகுமாரும் பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலனும் பேட்டிகளில் ஒருவரையொருவர் விமரிசித்துக்கொண்டனர். இரு குடும்பங்களுக்கிடையிலான பிரச்சனை சோசியல் மீடியாவில் விவாதப் பொருளானது. தயாரிப்பாளர் ரவீந்திரன், நடிகைகள் லட்சுமி ராமகிருஷ்ணன், கஸ்தூரி ஆகியோர் ஹெலனுக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். சமூகவலைத்தளங்களில் வனிதாவின் நடவடிக்கைகளைப் பலரும் விமரிசித்து வந்த நிலையில் தனி ஆளாக நின்று அனைத்தையும் அவர் எதிர் கொண்டார். விமர்சனங்களுக்கு பயந்து கடைசிவரை அவர் எடுத்த முடிவிலிருந்து பின்வாங்கவில்லை.  

இந்த நிலையில்தான் வனிதா விஜயகுமாரும் பீட்டர் பாலும் பிரிந்துவிட்டதாக ஒரு தகவல் வெளியாகி தற்போது பரபரப்பை கிளப்பியிருக்கிறது. பீட்டர் பாலை அடித்து துரத்திய வனிதா. விரட்டபட்ட பீட்டர் பால்... என்று மீண்டும் வனிதா குறித்து நெட்டிசன்கள் விளாசி தள்ளிக் கொண்டிருக்கிறார்கள். இது உண்மையா புரளியா என்று தெரியாத நிலையில் அந்த சம்பவம் குறித்து தற்போது வனிதா டிவிட்டரில் உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். பீட்டர் பாலின் பெயர் குறிப்பிடாமல் வெளியிடப்பட்டிருக்கும் அந்த அறிக்கையில் மறைமுகமாக பல்வேறு விஷயங்கள் குறிப்பிட்டிருக்கும் வனிதா... இறுதியாக, அதிசயம் நடக்குமென நம்புவதாகவும் அப்படி நடக்கவில்லை என்றால் அந்த சூழலை எதிர்கொள்ளப் போவதாகவும் கூறியிருக்கிறார். பீட்டர் பாலை விட்டு பிரிந்துவிட்டாரா? பிரிவுக்கான கரணம் என்ன? பிரியவில்லை என்றால் பீட்டர் பால் எங்கே? போன்ற கேள்விகளுக்கு அவர் வெளிப்படையாக பதிலளிக்கவில்லை என்றாலும் உண்மையில் என்ன நடந்தது என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

பீட்டர் பால் ஏற்கெனவே மொடா குடிகாரராக இருந்ததாகவும் அதனால்தான் அவரின் முதல் மனைவி அவரைப் பிரிந்ததாகவும் சொல்லப்பட்டு வந்தது அனைவருக்கும் தெரியும். வனிதாவை திருமணம் செய்த பின் சில நாட்களுக்கு அவர் அளவோடு குடித்து நல்ல பிள்ளையாகத்தான் இருந்திருக்கிறார். ஆனால், போகப் போக சிகரெட் மற்றும் குடியின் அளவு அதிகரித்ததாக கூறப்படுகிறது. 

இதனால் கடந்த மாத துவக்கத்தில் பீட்டர்பால் ஹார்ட் அட்டாக் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அப்போது அறுவை சிகிச்சைக்காக 4.50 லட்ச ரூபாய் வரை வனிதா செலவு செய்ததாகவும் கூறப்படுகிறது. அதன் பிறகு புகை பிடிக்கவோ மது அருந்தவோ கூடாது என மருத்துவர்கள் அறிவுறித்தியதை பீட்டர் பால் மீறியிருக்கிறார். அதனால் மீண்டும் அவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டிருக்கிறது. இரண்டாவது முறையாக சிகிச்சை அளித்திருக்கிறார்கள். இந்நிலையில் தான் வனிதாவிற்கு பிறந்த நாள் வந்திருக்கிறது. அதனை கொண்டாடுவதற்காக குடும்பத்தோடு அனைவரும் கோவா சென்றிருக்கிறார்கள். கோவாவில் ஆட்டம் பாட்டம், கொண்டாட்டம், சமையல் என நாட்கள் மகிழ்ச்சியோடு கழிந்திருக்கிறது. ஆனால், அங்கேயும் பீட்டர் பால் மது அருந்தியதாக சொல்லப்படுகிறது. இது தொடர்பாக அங்கேயே இருவருக்குமிடையே பிரச்னை வெடித்துள்ளது. கோவாவிலிருந்து சென்னைக்கு வந்ததும் பீட்டர்பாலின் அண்ணன் இறந்துவிடவே, அதன் காரணமாக அவரின் போதை தொடர்ந்திருக்கிறது. அண்ணன் வீட்டிற்குச் செல்வதாக கூறிவிட்டு சென்றவர் குறித்து எந்தத் தகவலும் தெரியாத நிலையில், வனிதா பீட்டர்பாலை விட்டு பிரிந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் சர்ச்சை தீயாய் பரவியது. இந்த சர்ச்சையைத் தொடர்ந்துதான் வெளியாகியிருக்கிறது வனிதாவின் சூசக அறிக்கை. அந்த அறிக்கையிலும் பீட்டர்பால் குறித்து எந்த தவறான தகவலையும் கூறவில்லை வனிதா. பீட்டர் பாலை திருமணம் செய்து கொண்டதிற்காக வருத்தமும் தெரிவிக்கவில்லை. தன்னுடைய நிலையை நினைத்து வருந்தவும் இல்லை. எதுவாக இருந்தாலும் அதை எதிர்கொள்ளப் போவதாக அறிவித்திருக்கிறார். வனிதா எப்போதுமே வனிதாவாகவே இருக்கிறார்!

இந்த சர்ச்சையைத் தொடர்ந்துதான் வெளியாகியிருக்கிறது வனிதாவின் வீடியோ விளக்கம். அந்த வீடியோவின் முடிவில் பீட்டர் பாலின் மனைவியிடம் உங்கள் கணவர் உங்களுக்கு வேண்டுமென்றால் எடுத்துக் கொள்ளுங்கள் என ஒரே போடாகப் போட்டிருக்கிறார் வனிதா. வனிதாவின் இந்த வார்த்தைகள் சர்ச்சைகளுக்கு மட்டுமல்ல. ஒட்டுமொத்தமாக எல்லாவற்றுக்குமே முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது. 


Next Story

மேலும் செய்திகள்