இறப்பதற்கு முன் தனது பெயரை கூகுளில் தேடிய சுஷாந்த் சிங் - கடும் மன அழுத்தத்தில் சுஷாந்த், இருந்ததாக போலீசார் தகவல்

மும்பையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ளும் சில மணி நேரம் முன்பு தனது பெயரை நடிகர் சுஷாந்த் சிங் கூகுளில் தேடியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இறப்பதற்கு முன் தனது பெயரை கூகுளில் தேடிய சுஷாந்த் சிங் - கடும் மன அழுத்தத்தில் சுஷாந்த், இருந்ததாக போலீசார் தகவல்
x
கடந்த ஜூன் மாதம், மும்பையில் நடிகர் சுஷாந்த் சிங், தற்கொலை செய்து கொண்டார்.  அதிகப்படியான மன அழுத்தம் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக, தகவல் வெளியான நிலையில், இது குறித்து மும்பை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை, சுஷாந்தின் தந்தை, காதலி ரியா, குடும்பத்தினர், நண்பர்கள், உடன் பணியாற்றிய இயக்குநர்கள், நடிகர் நடிகைகள், என ஏராளமானோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், சுஷாந்த் இறப்பதற்கு முன்பு தமது பெயரை, கூகுளில் தேடி அது குறித்த கட்டுரைகளை, படித்தாகவும், மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவது எப்படி என்பது குறித்தும், செய்திகளை படித்ததாக மும்பை போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும், அவரது மேலாளர் திஷா சாலியன், தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவரது பெயரையும், சுஷாந்த் கூகுளில் தேடியதாக மும்பை போலீசார் கூறியுள்ளனர். நடிகர் சுஷாந்த் சிங், பைபோலார் டிஸ் ஆர்டர் எனும் மன அழுத்த நோய்க்கு, மன நல மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்று வந்ததாகவும் மும்பை போலீசார் தெரிவித்துள்ளனர். சுஷாந்த்தின் வங்கி கணக்கிலிருந்து அவரது காதலி ரியாவுக்கு, 15 கோடி ரூபாய் பண பறிமாற்றம் செய்ததாக கூறிய புகார் முற்றிலும் தவறு என்றும், மும்பை போலீசார் கூறியுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்