"வள்ளுவருக்கு வண்ணம் பூசுவதை அனுமதிக்க முடியாது" - வைரமுத்து

வள்ளுவருக்கு வண்ணம் பூசி கொள்ளையடிக்க பார்க்கின்றனர் என்று வைரமுத்து குறிப்பிட்டார்.
x
வள்ளுவருக்கு வண்ணம்  பூசி கொள்ளையடிக்க பார்க்கின்றனர் என்று வைரமுத்து குறிப்பிட்டார்.  வெற்றி தமிழர் பேரவை சார்பில்,  திருவள்ளுவர் திருவிழா சென்னை அடையாறில், எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியில்  நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் வைரமுத்து, நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது பேசிய வைரமுத்து, வள்ளுவருக்கு வண்ணம் பூசி கொள்ளையடிக்க பார்க்கின்றனர் என்று கூறினார். வள்ளுவருக்கு, வண்ணம் போகாத வெள்ளை நிறத்தை மட்டுமே உடுத்த வேண்டும் என்பதை தமிழர்கள் கொள்கையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் வைரமுத்து வலியுறுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்