"நடிகர் ராஜ்கிரண் உருக்கமான வேண்டுகோள்"

பிரித்தாளும் சூழ்ச்சி என்பது காலங் காலமாக புளித்துப் போன விசயம் என்று நடிகர் ராஜ்கிரண் தெரிவித்துள்ளார்.
நடிகர் ராஜ்கிரண் உருக்கமான வேண்டுகோள்
x
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், இஸ்லாமியர்கள், அரபு நாடுகளிலிருந்து வந்தவர்கள் போலவும், பாகிஸ்தான் தான் அவர்களது நாடு என்பது போலவும் நச்சுக் கருத்துக்கள்  பாமர மக்களின் மனங்களில் விதைக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

* இங்குள்ள இஸ்லாமியர்கள் அனைவரும் இந்துக்களின் இரத்த சொந்தங்கள் என்று குறிப்பிட்டுள்ள ராஜ்கிரண், 

* தன் தகப்பனாரின் மூதாதையர்கள், சேதுபதிச்சீமையின் மறவர் குலத்தை சேர்ந்தவர்கள் என குறிப்பிட்டுள்ளார்

* இந்து மதத்திலுள்ள தீண்டாமை போன்ற காரணங்களால் தான் இஸ்லாமிய வாழ்க்கை முறைக்கு பெரும்பாலானோர் மாறியதாகவும் ராஜ்கிரண் குறிப்பிட்டு​ள்ளார். ​

* பேதங்கள் அற்றதே பெரு வாழ்வு, அதில் மனித நேயமே மாண்பு என்றும் ராஜ்கிரண் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்