சல்மான் கானின் "தபாங் 3" படக்குழு செய்தியாளர் சந்திப்பு - பிரபல பாலிவுட் நடிகர் சல்மான்கான் பேச்சு
தென்னிந்திய படங்களை ரீமேக் செய்வதில் தனக்கு எப்போதும் அதிக ஆசை உண்டு என பிரபல இந்தி நடிகர் சல்மான்கான் தெரிவித்துள்ளார்.
தென்னிந்திய படங்களை ரீமேக் செய்வதில் தனக்கு எப்போதும் அதிக ஆசை உண்டு என பிரபல இந்தி நடிகர் சல்மான்கான் தெரிவித்துள்ளார். பிரபுதேவா இயக்கத்தில் சல்மான்கான் நடித்துள்ள 'தபாங் ' படத்தின் மூன்றாவது பாகம் வரும் டிசம்பர் 20 ம் தேதி தமிழ் , இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது. இதனையொட்டி சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சல்மான்கான், பிரபுதேவா, ஹீரோயின் மாஹி கில், சுதீப் ஆகியோர் பங்கேற்றனர். அப்போது பேசிய சல்மான்கான், தபாங் படம் தமிழில் வெற்றி அடையும் என்ற நம்பிக்கை உள்ளதாக தெரிவித்தார். ரஜினி, கமல், விக்ரம் படங்கள் ஹிந்தியில் வெற்றி அடைவதைபோல் தபாங் படமும் தமிழில் வெற்றி அடையும் என்று அவர் கூறினார்.
Next Story