விஜய் பட நடிகருக்கு நேர்ந்த சோகம்...
நடிகருடன் ஒரே மேடையில் அமர மறுத்தது உறுதியானால், இயக்குநர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கேரள அமைச்சர் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நடிகருடன் ஒரே மேடையில் அமர மறுத்தது உறுதியானால், இயக்குநர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கேரள அமைச்சர் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நடிகர் விஜயின் தெறி படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்த கேரளாவைச் சேர்ந்த பினீஸ் பாஸ்டின், பாலக்காட்டில் உள்ள மருத்துவக் கல்லூரி விழாவுக்கு அழைக்கப்பட்டு உள்ளார். ஆனால், அவரை தாமதமாக வரும்படி, மாணவர்கள் கேட்டுள்ளனர். விழா தொடங்கும் போதுதானே அங்கு இருக்க வேண்டும் என்று கூறிய பினீஸிடன், தங்களுடன் மேடையை பகிர்ந்துகொள்ள மற்றொரு விருந்தினரான இயக்குநர் விரும்பவில்லை என உண்மையை கூறியுள்ளனர். இதையறிந்த பினீஸ் பாஸ்டின், மேடைக்கு சென்று தரையில் அமர்ந்தார். இந்த விவகாரத்தில், இயக்குநர் கூறியது உண்மையானால் நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த மாநில பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஏ.கே. பாலன் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story