என் மகனுக்கு உதவுங்கள் - அரசுக்கு பரவை முனியம்மா கோரிக்கை

மாற்று திறனாளியான தனது மகனுக்கு தமிழக அரசு உதவ வேண்டும் என நாட்டுப்புற பாடகி பரவை முனியம்மா கோரிக்கை விடுத்துள்ளார்.
x
கம்பீர குரலால் பாடி, நடித்து அசத்திய நாட்டுப்புற பாடகி பறவை முனியம்மா உள்ளிட்ட பலருக்கு தமிழக அரசு கலைமாமணி விருதுகளை அறிவித்தது. இதற்காக முதலமைச்சர் உள்ளிட்டோருக்கு பரவை முனியம்மா நன்றி தெரிவித்துள்ளார். மதுரை அருகே பரவை பகுதியில் வசித்து வரும் பரவை முனியம்மா ஏராளமான நாட்டுப்புற பாடல்களை பாடியுள்ளார்.  பல திரைப்படங்களில் நடித்துள்ள அவர் தற்போது வருமானமின்றி கஷ்டப்பட்டு வருகிறார். ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது  6 லட்ச ரூபாய் கொடுத்ததாவும், அதன் முலம் கிடைக்கும் வட்டி பணத்தை கொண்டே வாழ்க்கையை நடத்தி வருவதாகவும் கூறுகிறார், பரவை முனியம்மா. கணவரை இழந்த தனக்கு செந்தில் என்ற மன வளர்ச்சி குன்றிய மாற்று திறனாளி மகன் உள்ளதாகவும்,   ஜெயலலிதா கொடுத்த நிதியுதவியை தனக்கு பின்பு மகனுக்கு தொடர்ந்து வழங்கி உதவிடுமாறு  தமிழக அரசுக்கு பறவை முனியம்மா கோரிக்கை விடுத்துள்ளார்.  

Next Story

மேலும் செய்திகள்