"இயக்குனரானால் ஆர்யா தான் என் ஹீரோ" - நடிகர். சந்தானம்

தாம் இயக்குனரானால் ஆர்யாவை வைத்தே படம் எடுப்பேன் என்று கூறிய நடிகர் சந்தானம் தெரிவித்துள்ளார்.
x
நடிகராக இருப்பதை விட தயாரிப்பாளராக இருப்பது தான் கஷ்டம் என்று நடிகர் சந்தானம் தெரிவித்துள்ளார். 'தில்லுக்கு துட்டு' 2 படத்தின் செய்தியாளர்  சந்திப்பின் போது பேசிய நடிகர் சந்தானம், படத்தை எடுப்பதை விட, அதனை வெளியிடுவது தான் சிரமமாக இருப்பதாக தெரிவித்தார். ரீலீஸ் பிரச்சினையை தமது படமும் சந்தித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். தாம் இயக்குனரானால் ஆர்யாவை வைத்தே படம் எடுப்பேன் என்று கூறிய நடிகர் சந்தானம், திரைத்துறைக்கு தம்மை அறிமுகப்படுத்திய சிம்புவுக்கு நன்றி தெரிவித்து கொண்டார். 

Next Story

மேலும் செய்திகள்