திருமணம் என்பது சமீபகாலத்து நாகரீகம் தான் - வைரமுத்து

திருமண பந்தம் சமீப காலத்து நாகரீகம் தான், இந்த பந்தம் இன்னும் 50 அல்லது 100 ஆண்டுகள் வரைதான் இருக்கும் என வைரமுத்து தெரிவித்துள்ளார்.
x
இயக்குனர் சேரனின் இயக்கத்தில் நடிகர் தம்பி ராமையா மகன் நடிப்பில் உருவான "திருமணம்" திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.  இதில், முன்னணி இயக்குனர்களான பாரதிராஜா, மகேந்திரன், கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் இளம் தலைமுறை இயக்குனர்கள் கோபி நயினார், லெனின் பாரதி, மாரிசெல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் பேசிய கவிஞர் வைரமுத்து, திருமண பந்தம் சமீப காலத்து நாகரீகம் தான் என்றும், இந்த பந்தம் இன்னும் 50 அல்லது 100 ஆண்டுகள் வரைதான் இருக்கும் என்றும் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்