சி.சி.டி.வி மூலம் அம்பலமான நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கடத்தல் நாடகம்

நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கடத்தப்பட்டதாக எழுந்த புகார் அனைத்தும் அவரே அரங்கேற்றிய நாடகம் என சிசிடிவி காட்சிகள் மூலம் தெரிய வந்துள்ளதால் அவர் மீது வழக்கு பதிவு செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
சி.சி.டி.வி மூலம் அம்பலமான நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கடத்தல் நாடகம்
x
சென்னை அண்ணாநகரை சேர்ந்த பவர்ஸ்டார் சீனிவாசன் கடந்த 9 ஆம் தேதி தன்னுடைய மனைவி கடத்தப்பட்டுள்ளதாக கோயம்பேடு காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் ஊட்டிக்கு சென்று அவரது மனைவியை மீட்டதுடன், இந்த விவகாரம் தொடர்பாக பவர்ஸ்டாரின் உறவினர் கார்த்திகேயன் மற்றும் ஏழு பேரை கைது செய்தனர். அவர்களிடம் விசாரித்த‌தில் இந்த கடத்தல் நாடகத்திற்கு மூளையாக செயல்பட்டதே பவர் ஸ்டார் சீனிவாசன் தான் என்பது தெரிய வந்துள்ளது. கோயம்பேட்டில் உள்ள தனியார் ஓட்டலில் வைத்து பவர் ஸ்டார் கடத்தப்பட்டதாக கூறியிருந்தநிலையில், அங்கிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்த‌தில் அதுவும் உண்மையில்லை என்பது தெரிய வந்துள்ளது. இந்த ஆவணங்கள் மற்றும் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து பெற்ற வாக்குமூலங்களை நீதிமன்றத்தில் சம‌ர்பித்துள்ள  கோயம்பேடு போலீசார், நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனை கைது செய்ய அனுமதி கோரி உள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்