இளம் சினிமா நடிகை தூக்கு போட்டு தற்கொலை

இளம் சினிமா நடிகை தூக்கு போட்டு தற்கொலை, மன உளைச்சலால் தற்கொலை என விசாரணையில் தகவல்
இளம் சினிமா நடிகை தூக்கு போட்டு தற்கொலை
x
குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம், அகோரி போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்துள்ள ரியாமிகா, வளசரவாக்கத்தில் வாடகை வீட்டில் தனது தம்பியுடன் வசித்து வந்துள்ளார். நேற்று காலை வெகு நேரமாகியும் வெளியே வராததால், அவரது தம்பி ஜன்னல் வழியாக பார்த்தபோது ரியாமிகா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது. தகவலறிந்து வந்த போலீசார் ரியாமிகா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பட வாய்ப்புகள் இல்லாதது, காதலனுடன் தகராறு என மன உளைச்சலில் இருந்ததால் ரியாமிகா தற்கொலை செய்துகொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்