முருகதாசை வரும் 27ம் தேதி வரை கைது செய்ய தடை

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாசை 27 ம் தேதி வரை கைது செய்ய கூடாது என, காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முருகதாசை வரும் 27ம் தேதி வரை கைது செய்ய தடை
x
இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான சர்கார் படத்திற்கு எதிராக அதிமுகவினர் தமிழகமெங்கும்  போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், தனக்கு முன் ஜாமீன் வழங்க கோரி முருகதாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது,  முருகதாஸ் மீதான புகாரின் மீது ஆரம்ப கட்ட விசாரணை நடந்து வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, முருகதாசை 27 ம் தேதி வரை கைது செய்ய கூடாது என உத்தரவிட்டார். மேலும் இந்த புகார் மீதான விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என ஏ. ஆர் முருகதாஸ் நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்