"சர்கார் படத்தின் கதை திருடப்பட்டதா ?"- வசனகர்த்தா ஜெயமோகன் விளக்கம்

சர்கார் படத்தின் கதை திருடப்பட்டது என்று சொல்வது வணிக வியாபாரம் என எழுத்தாளர் ஜெயமோகன் தெரிவித்துள்ளார்.
சர்கார் படத்தின் கதை திருடப்பட்டதா ?- வசனகர்த்தா ஜெயமோகன் விளக்கம்
x
சர்கார் படத்தின் கதை திருடப்பட்டது என்று சொல்வது வணிக வியாபாரம் என எழுத்தாளர் ஜெயமோகன் தெரிவித்துள்ளார். அண்மையில் வருண் ராஜேந்திரன் என்பவர் செங்கோல் என்ற படத்திற்காக தான் எழுதிய கதைதான் சர்கார் என வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், படத்தின் வசன கர்த்தாவான ஜெயமோகன், தன்னுடைய வலைப்பூவில் இது தொடர்பாக கருத்துப்பதிவிட்டுள்ளார். அதில், சிவாஜி கணேசனின் ஓட்டை திருடி, யாரோ போட்டு விட்டார்கள் என்ற ஒன் லைன் கதையை வைத்து தான் முழுபடமும் எடுக்கப்பட்டுள்ளதாகவும், சமகால விசயங்கள் ஒரு கைப்பிடி அளவு தான் என்றும் தெரிவித்துள்ளார். ஒன்லைன் இருந்தால் போதும் விஜயை வைத்து படமே உருவாக்கிவிடலாம் என்றும், மற்றபடி கதை திருட்டு என்று சொல்வதெல்லாம் வணிக வியாபாரம் எனவும் ஜெயமோகன் தனது ஆதங்கத்தைப் பதிவு செய்துள்ளார்.



Next Story

மேலும் செய்திகள்