திருட்டு வீடியோவை தடுக்க நடவடிக்கை - தயாரிப்பாளர் சங்கம்

திருட்டு வீடியோவை ஒழிப்பது தொடர்பாக, சில தீர்மானங்களை திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் நிறைவேற்றியுள்ளது.
திருட்டு வீடியோவை தடுக்க நடவடிக்கை - தயாரிப்பாளர் சங்கம்
x
* தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. 

* தமிழ்நாட்டில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் வாசல் மற்றும் பார்க்கிங் பகுதிகளில், தீபாவளி தினத்துக்குள் CCTV கேமரா பொருத்த வேண்டும் எனவும்  நவம்பர் 15ம் தேதிக்குள்  CCTV கேமரா பொருத்தாத திரையரங்குகளுக்கு திரைப்படம் தரப்பட மாட்டாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

* ஒவ்வொரு காட்சியின்போதும், திருட்டு வீடியோ தொடர்பான விழிப்புணர்வு வீடியோ ஒளிபரப்பப்படும் எனவும், படம் பார்க்க வருபவர்களிடம் கேமரா உள்ளதா என பரிசோதனை செய்யப்படும் எனவும் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது. 

* இதுபோல, திருட்டு வீடியோ பிரச்சினை தொடர்பாக, தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் இணைந்த குழுவை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. 



Next Story

மேலும் செய்திகள்