நடிகர் ஹிருத்திக் ரோஷன் மீது வழக்குப்பதிவு

சென்னை - கொடுங்கையூரை சேர்ந்த முரளிதரன் என்பவர், நடிகர் ஹிருத்திக் ரோஷன் நடத்தி வந்த நிறுவனத்தின் வாசனை திரவியங்களை தயாரித்து விற்று வந்தார்.
நடிகர் ஹிருத்திக் ரோஷன் மீது வழக்குப்பதிவு
x
சென்னை - கொடுங்கையூரை சேர்ந்த முரளிதரன் என்பவர், நடிகர் ஹிருத்திக் ரோஷன் நடத்தி வந்த நிறுவனத்தின் வாசனை திரவியங்களை தயாரித்து விற்று வந்தார். இதற்கிடையே ஹிருத்திக் ரோஷன் தனது நிறுவனத்தை விற்றுவிட்டதால், முரளிதரனுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அனைவரும் சேர்ந்து கூட்டு சதி செய்து ஏமாற்றியுள்ளதாக கூறி ஹிருத்திக் ரோஷன் உட்பட 9 பேர் மீது முரளிதரன் போலீசில் புகார் அளித்தார். 2014ஆம் ஆண்டு இந்த சம்பவம் நடைபெற்றது. புகார் ஏற்றுக் கொள்ளப்படாததால் முரளிதரன் நீதிமன்றத்தை அணுகினார். நீதிமன்ற உத்தரவின் படி கடந்த ஜூன் மாதம் 9 பேர் மீதும் கொடுங்கையூர் போலீசார் மோசடி  வழக்கு பதிவு செய்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்