"கேரள வெள்ள நிவாரணத்துக்கு ரூ.1 கோடி நிதி வழங்க முடிவு" - ராகவா லார​ன்ஸ்

கேரள வெள்ள நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபாய் அளிக்க முடிவு செய்து உள்ளதாகவும் வரும் சனிக்கிழமை அம்மாநில முதலமைச்சரை நேரில் சந்தித்து நிதியை அளிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கேரள வெள்ள நிவாரணத்துக்கு ரூ.1 கோடி நிதி வழங்க முடிவு - ராகவா லார​ன்ஸ்
x
கேரளாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நமது சகோதர சகோதரிகளை பார்க்கும் போது மனமுடைந்து போனதாக நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கேரள வெள்ள நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபாய் அளிக்க முடிவு செய்து உள்ளதாகவும் வரும் சனிக்கிழமை அம்மாநில முதலமைச்சரை நேரில் சந்தித்து நிதியை அளிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு கேரள முதலமைச்சர் காட்டும் பகுதியில் பணி செய்ய உள்ளதாக தெரிவித்துள்ள நடிகர் லாரன்ஸ், இதுவரை உதவி செய்தவர்களுக்கும், இனிமேல் உதவி செய்யப் போகிறவர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார். பேரழிவில் இருந்து கேரள மாநிலம் கட்டியெழுப்பப்பட ராகவேந்திர சுவாமிகளை வேண்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்