Tasmac | முன்கூட்டியே மூடப்படும் டாஸ்மாக், பார்கள், கிளப்கள்
முன்கூட்டியே மூடப்படும் டாஸ்மாக், பார்கள், கிளப்கள்
தமிழகம், மேற்கு வங்கத்தில் மதுக்கடைகள் அடைப்பு தேர்தல் நடைமுறைச் சட்டத்தின்படி, வாக்குப் பதிவு முடிவடைவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்னதாகவே இன்று மாலை முதல் தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்தில் தேர்தல் நடைபெறும் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகள், பார்கள் மற்றும் கிளப்கள் அனைத்தும் மூடப்படுகின்றன. வாக்காளர்களுக்கு மது விநியோகம் செய்யப்படுவதைத் தடுக்கவும், சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த 48 மணி நேரத் தடைக்காலத்தை மீறி எவரேனும் மது விற்பனையில் ஈடுபட்டால், அவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது
