வெடித்து சிதறும் உட்கட்சி பூசல்! காங்கிரஸ் வேட்பாளரை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

x

நெல்லை தொகுதியில் உத்தேசப் பட்டியலில் இடம் பெற்றுள்ள வேட்பாளருக்கு எதிர்ப்பு தெரிவித்து எம்.எல்.ஏ. ரூபி மனோகரனின் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாங்குநேரி பகுதியைச் சேர்ந்த பால்ராஜ் என்பவர் காங்கிரஸ் உத்தேச வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக தெரிகிறது. ரூபி மனோகரனின் மகனுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பால்ராஜிற்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லை காங்கிரஸார் இடையே உட்கட்சி பூசல் வெடித்துள்ளது. மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவருக்கு வாய்ப்பு வழங்கக் கூடாது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்