"இவர்களுக்கு வாக்களிக்காதீர்".. அர்ஜுன் சம்பத் பரபரப்பு பேட்டி

x

இந்து மதத்தை இழிவுபடுத்தியவர்களுக்கு வாக்களிக்கக் கூடாது என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வெளியே துண்டுப் பிரசுரங்களை வழங்கி முழக்கமிட்டார். சிதம்பரம் நடராஜர் கோவிலில் தொண்டர்களுடன் இணைந்து அர்ஜுன் சம்பத் சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து கோவிலுக்கு வெளியே பதாகைகளை ஏந்தி துண்டுப் பிரசுரங்களை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், இந்து மதத்தையும் சனாதன தர்மத்தையும் இழிவுபடுத்தியவர்களுக்கு வாக்களிக்கக் கூடாது என்றார்..


Next Story

மேலும் செய்திகள்