அன்புமணியை ஒருமையில் பேசி ஈபிஎஸ் பாய்ச்சல்.. உக்கிரமாகும் ஃபைனல் ரவுண்டு

x

தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் அசோகனை ஆதரித்து அக்கட்சி பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சேலம் மேச்சேரியில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர் அதிமுக தமிழகத்தில் 30 ஆண்டுகாலம் சிறப்பான ஆட்சியை கொடுத்துள்ளதாக பெருமிதம் தெரிவித்தார். சாலை, மருத்துவம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்படுத்தி கொடுத்தது கடந்த கால அதிமுக அரசு தான் என்று கூறினார். மக்களுக்காக நன்மை செய்கின்ற ஒரே கட்சி அதிமுக தான் என்று கூறிய எடப்பாடி பழனிசாமி, பாஜக கூட்டணியில் இணைந்த பாமகவையும் அக்கட்சி தலைவர் அன்புமணி ராமதாசையும் கடுமையாக விமர்சித்தார்.


Next Story

மேலும் செய்திகள்