ஆம்புலன்ஸ் செல்வதற்காக பிரச்சாரத்தை நிறுத்திய அதிமுக வேட்பாளர்

x

ஆம்புலன்ஸ் செல்வதற்காக பிரச்சாரத்தை நிறுத்திய அதிமுக வேட்பாளர்

#sivagangai #admk #loksabhaelections2024 #electioncampaign #thanthitv

சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சேவியர் தாஸ், ஆப்புலன்ஸ் செல்வதற்காக தனது பிரச்சாரத்தை நிறுத்திய செயல் வரவேற்பை பெற்றுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி சுற்றுவட்டார பகுதியில் சேவியர் தாஸ் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, கொத்தமங்கலம் கடைவீதியில் 9:15 மணிக்கு வரவேண்டிய அவர், தாமதமாக சுமார் 9:55 மணிக்கு வந்தடைந்தார். அப்போது, 10 மணிக்குள் பிரச்சாரத்தை முடிக்க வேண்டுமென்பதற்காக அவர் தனது பேச்சை தொடங்கிய போது, அவ்வழியாக ஒரு ஆம்புலன்ஸ் வந்தது. இதனால், அவர் தனது உரையை நிறுத்திவிட்டு ஆம்புலன்ஸ்-க்கு வழிவிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்