காசாவுக்கு ஆதரவாக இரண்டு நாடுகளில் எழுந்த குரல்

காசாவில் இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகளைக் கண்டித்து, சிலி மற்றும் அர்ஜென்டினா நாடுகளில் பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக ஒற்றுமை பேரணி நடத்தப்பட்டது. “இனப்படுகொலையை நிறுத்த வேண்டும்“ என முழக்கமிட்டபடி திரளானோர் இஸ்ரேலுக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டனர். பசி என்பது போர்க்குற்றம் என்றும், இஸ்ரேல் பாலஸ்தீன மக்களை பட்டினி போடுவதாகவும் குற்றம் சாட்டி போராட்டக்காரர்கள் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

X

Thanthi TV
www.thanthitv.com