ஜப்பானில் அதி பயங்கரம்.. புத்தாண்டில் நொறுங்கி கிடக்கும் வீடுகள்.. குலுங்கிய அடுக்கு மாடி கட்டடங்கள்

x

ஜப்பானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜப்பானின் இஷிகாவா நகரம் நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகள் பாளம் பாளமாக வெடித்துள்ளதால் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது. கட்டிட இடிபாடுகளில் சிக்கி நூற்று கணக்கான வாகனங்கள் சேதம் அடைந்துள்ளன. கடைகளில் சிதறி கிடக்கும் பொருட்களையும், உடைந்து கிடக்கும் கண்ணாடிகளையும் அதன் உரிமையாளர்கள் அகற்றி வருகின்றனர். ஓடுபாதையில் ஏற்பட்டுள்ள விரிசல் காரணமாக விமான சேவை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்