துபாயில் மேகம் ரெண்டாக பிளந்து.. கொட்டியது போல கொட்டிய பூத மழை.. இந்தியாவுக்கு வந்த அதிர்ச்சி தகவல்

x

துபாயில் கடந்த 75 ஆண்டு காலத்தில் இல்லாத அளவிலான கனமழை பெய்துள்ளது. 12 மணி நேரத்தில், 100 மில்லி மீட்டர் மழை பெய்துள்ள நிலையில், துபாய் சர்வதேச விமான நிலையத்தில், வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்த நிலையில் துபாய்க்கு கிளம்பும் 10 விமானங்களும், மறுமார்க்கத்தில் டெல்லிக்கு வரவேண்டிய 9 விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர். விமான ரத்து காரணமாக பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்