Donald | Trump Pm Modi | உலக தலைவர்கள் முன் பிரதமர் மோடி பற்றி டிரம்ப் சொன்ன விஷயம்
தென்கொரியாவில் நடைபெற்ற ஆசிய பசிபிக் பொருளாதார மாநாட்டில் உரையாற்றிய டிரம்ப், இந்தியாவும், பாகிஸ்தானும் சண்டையிட்டபோது இருநாட்டுத் தலைவர்களுடனும் தான் பேசியதாகவும்,
வர்த்தகம் செய்யப் போவதில்லை என்று கூறியதாகவும் தெரிவித்தார்.
பிரதமர் மோடி பார்க்க மென்மையானவர்... ஆனால் அதே சமயம் மிக கடினமான நபர் என்று குறிப்பிட்ட டிரம்ப்,
தான் பேசிய பின்னரும் தாங்கள் சண்டையிடுவோம் என்று கூறியதாகவும்,
2 நாட்களுக்குப்பின் இருவரும் தொலைபேசியில் அழைத்து தங்களுக்கு புரிகிறது என்று கூறி, சண்டையை நிறுத்தியதாகவும்,
இதனை ஜோ பைடன் செய்திருக்க முடியும் என்று நினைக்கிறீர்களா?... நிச்சயம் இல்லை என்றும் டிரம்ப் தெரிவித்தார்.
இந்தியாவும், பாகிஸ்தானும் சண்டையை நிறுத்தாமல் இருந்திருந்தால் 250 சதவீத வரி விதிப்பை எதிர்கொண்டிருக்க நேரிடும் என்றும் டிரம்ப் குறிப்பிட்டார்.
பிரதமர் நரேந்திர மோடி மீது மிகுந்த மரியாதையும், அன்பும் கொண்டுள்ளதாக தெரிவித்த டிரம்ப்,
பிரதமர் மோடியுடன் சிறந்த உறவைக் கொண்டுள்ளதாகவும், அவர் தனது நல்ல நண்பர்....
விரைவில் இந்தியாவுடன் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ளப் போவதாகவும் குறிப்பிட்டார்.
