சேலம் ஆட்சியர் அலுவலகம் முன்பு பெண் தீக்குளிக்க முயற்சி

குடும்ப பிரச்சினை காரணமாக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பெண் ஒருவர் தீக்குளிக்க முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் ஆட்சியர் அலுவலகம் முன்பு பெண் தீக்குளிக்க முயற்சி
Published on
குடும்ப பிரச்சினை காரணமாக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பெண் ஒருவர் தீக்குளிக்க முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மெய்யனூர் பகுதியை சேர்ந்த கவிதா என்பவர், தனது கணவர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டு, தம்மையும், மகளையும் புறக்கணிப்பதாக புகார் அளித்துள்ளார். ஆனால் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால், ​மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கவிதா தீக்குளிக்க முயன்றார். அப்போது பணியில் இருந்த போலீசார், தண்ணீரை ஊற்றி அவரை தடுத்து நிறுத்தினர். இது தொடர்பாக கவிதாவிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
X

Thanthi TV
www.thanthitv.com