குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து குறைவு - சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி

குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்ததை அடுத்து தற்போது சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி.
குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து குறைவு - சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி
Published on

குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்ததை அடுத்து தற்போது சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்கியது முதலே மேற்கு தொடர்ச்சி மழையில் கனமழை பெய்து வந்ததால், குற்றால அருவிகளில் நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் அனுமதிக்கவில்லை. இந்நிலையில், தற்போது நீர்வரத்து குறைய தொடங்கியுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் அருவிகளில் குளித்து வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com