Karur Latest News| கரூரில் கண்ணால் கூட பார்க்க முடியாத பயங்கரம் - 2 டிரைவரும் கொடூர சாவு
லாரிகள் நேருக்கு நேர் மோதிய விபத்து - 2 ஓட்டுநர்கள் உயிரிழப்பு கரூர் மாவட்டம் குளித்தலை அருகே இரண்டு லாரிகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில், 2 லாரி ஓட்டுநர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். குமாரமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது. கொல்லுமாங்குடியில் இருந்து நெல் லோடு ஏற்றிக்கொண்டு கரூர் நோக்கி வந்த லாரியும், எம்-சாண்ட் ஏற்றிக்கொண்டு திருச்சி நோக்கி சென்ற லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்தில் சிக்கின. இதில், லாரி ஓட்டுநர்களான மேகநாதன், கோபி கிருஷ்ணன் ஆகிய இருவரும் உயிரிழந்தனர். தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார், நீண்ட நேரம் போராடி உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், லாரிகளின் பின்னால் வந்த 2 கார்கள் மோதியதில், அவற்றின் முன்பகுதிகள் சேதமடைந்தன. விபத்து குறித்து குளித்தலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
