தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் ஆய்வுக்கு அனுமதி - தினகரன் கடும் கண்டனம்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான ஆய்வுகளை மேற்கொள்ள வேதாந்தா நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி அளிப்பதிருப்பதற்கு தினகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் ஆய்வுக்கு அனுமதி - தினகரன் கடும் கண்டனம்
Published on

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான ஆய்வுகளை மேற்கொள்ள வேதாந்தா நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி அளிப்பதிருப்பதற்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொது செயலாளர் தினகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.மக்களின் எதிர்ப்பை மீறி தமிழகத்தை பாலைவனமாக்கும் திட்டங்களை செயல்படுத்துவதில் மத்திய அரசு தீவிரமாக இருப்பதாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.இந்த திட்டத்திற்கு அனுமதி அளிக்க முடியாது என புதுச்சேரி அரசு போல தமிழக அரசும் அறிவிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.இது போன்ற திட்டங்களை செயல்படுத்துவதற்கு தடை விதிக்க உரிய நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் அதில் தினகரன் தெரிவித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com