ரயிலில் ஏற முயன்ற பயணிக்கு நேர்ந்த விபரீதம் - முதியவரை பத்திரமாக மீட்ட போலீசார்

மகாராஷ்டிராவில் நடைமேடைக்கும் ரயிலுக்கும் இடையே சிக்கிய முதியவரை போலீசார் இருவர் மீட்கும் பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
ரயிலில் ஏற முயன்ற பயணிக்கு நேர்ந்த விபரீதம் - முதியவரை பத்திரமாக மீட்ட போலீசார்
Published on

மகாராஷ்டிராவில் நடைமேடைக்கும் ரயிலுக்கும் இடையே சிக்கிய முதியவரை போலீசார் இருவர் மீட்கும் பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. அங்குள்ள கல்யான் ரயில் நிலையத்தில் புறப்பட்ட ரயிலில் மன்சூர் அகமது என்ற முதியவர் ஏற முயன்றுள்ளார். அப்போது அவர் தவறி விழுந்து ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையே சிக்கிகொண்டார். இதை பார்த்த ரயில்வே போலீசார் இருவர், துரிதமாக செயல்பட்டு முதியவரை பத்திரமாக மீட்டனர்.

X

Thanthi TV
www.thanthitv.com