"டெல்டா விவசாயிகளுக்கு விரைவில் நல்ல செய்தி வரும்" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

வேளாண் மண்டல விவகாரத்தில், டெல்டா விவசாயிகளுக்கு விரைவில் நல்ல செய்தி வரும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
"டெல்டா விவசாயிகளுக்கு விரைவில் நல்ல செய்தி வரும்" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
Published on

வேளாண் மண்டல அறிவிப்பை சுட்டிக்காட்டி பேசிய எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், ஹைட்ரோகார்பன் திட்டங்களின் நிலை என்ன? என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, காவிரி டெல்டா பகுதியில் மண்டலம் அறிவிப்பு தொடர்பாக சட்ட நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்து வருவதாக கூறினார். விரைவில் டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு விரைவில் நல்ல செய்தி வரும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார். காவிரி டெல்டா மண்டலம் தொடர்பான பணிகள் தொடங்கப்பட்டிருப்பதாகவும் முதலமைச்சர் பழனிசாமி விளக்கம் அளித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com