கேரளா-தமிழகம் எல்லை பிரச்சனை?.. நடுக்கடலில் மீனவர்கள் செய்த சம்பவம்

x

எல்லை தாண்டி மீன்பிடிக்க வரும் கேரள மீனவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தூத்துக்குடியைச் சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள் தொழில் செய்யும் பகுதியில் அத்துமீறி நுழைந்து தொழில் செய்ததாக கேரள மாநில விசைப்படகு மீனவர்களை நடுக்கடலில் சிறை பிடித்து தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள் கொண்டு வந்தனர். தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக விசைப்படகு மீனவர்கள் கூறியுள்ள நிலையில், இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர், கடலோர பாதுகாப்பு குழும காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்